May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு பண உதவி வழங்கிய தமிழக யாசகர்!

இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த யாசகர் ஒருவர், இலங்கை மக்களுக்காக தன்னிடமுள்ள பணத்தை வழங்கி உதவ தீர்மானித்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற யாசகர், தான் யாசகம் செய்து சேமித்திருந்த 20,000 இந்திய ரூபா பணத்தை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பவென மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கையளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன், தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார்.

இதற்கமைய இவர் கொரோனா பரவல் காலத்தில் தமிழ் நாட்டு அரசுக்கு 4 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தன்னிடமுள்ள பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்க முன்வந்துள்ளார்.

”எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.