October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது!

Lockdown or Curfew Common Image

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில்  அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு  மத்தி மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் மீரிஹான இல்லத்திற்கு அருகில்  மக்கள் போராட்டத்தை தொடர்ந்தே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் ஊரடங்கை தளர்த்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.