October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு  மத்தி மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் தலைமையகம் ஏப்ரல் 1 அதிகாலை அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் மீரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெரும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.