October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவித்தல்!

டீசல் பெற்றுக் கொள்வதற்காக மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று இலங்கை பெட்ரோலியக் கூடுத்தாபனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

37,500 மெட்ரிக் டொன்  டீசலுடன் இலங்கை வந்த கப்பலில் இருந்து 29 ஆம் திகதி டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெட்ரோல் வழமைப்போன்று விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது