
இலங்கையில் மார்ச் 30 ஆம் திகதி தொடக்கம் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கட்டம் கட்டமாக இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 மணித்தியால மின்வெட்டுக்கு மின்சார சபை அனுமதி கோரியிருந்த நிலையில் 10 மணித்தியாலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.