May 23, 2025 14:43:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அயலுறவுக்கு முதலிடம்”: பஸிலிடம் கூறிய ஜெய்சங்கர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பிலுள்ள நிதி அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் பொருளாதார நிலைமை தொடர்பிலும் இந்தியாவின் உதவித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, ”அயலுறவுக்கு முதலிடம்” கொள்கைமூலம் இந்தியா தொடர்ந்தும் உதவும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும் சந்திக்கவுள்ளார்.