June 11, 2025 10:42:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 16 பேர் கைது!

File Photo

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்புகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளில் போது இவர்கள் கைது செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நெடுந்தீவு கடற்பரப்பில் படகு ஒன்றுடன் 4 மீனவர்களும், இரணைதீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்