October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் வரிசையில் மோதல்: ஒருவர் மரணம்!

File photo

நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் கொள்வனவுகாக வரிசையில் நின்ற இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போதே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், முச்சக்கர வண்டியில் வந்த ஒருவரும் வரிசையில் நின்ற போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதாகவும், இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த நபர், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வேளையில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.