October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இரவு 8.30 மணியளவில் அவர் தொலைகாட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஊடாக மக்களுக்கு உரையாற்றுவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி, மக்களை தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய தினத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.