May 23, 2025 13:43:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ளதால் அந்தப் பகுதியில் அமைதியின்மை நிலவி வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் போராட்டம் ஆரம்பமானதுடன், ஆர்ப்பாட்டக் காரர்கள் பல்வேறு பிரதேசங்களின் ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட பெருந்திரளாவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது அங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரையில் எங்களின் போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது மக்கள் தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் என்று அரசாங்கத்திற்கு அவர் வேண்டுகோளும் விடுத்தார்.