October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் அணிதிரளும் எதிர்க்கட்சி!

File Photo

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதுடன், இதில் நாடு முழுவதும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டமாக இருக்க வேண்டும் என்றும், இதில் கட்சிப் பேதமின்றி கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.