October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசில்: 198 புள்ளிகளைப் பெற்று யாழ். மாணவன் சாதனை!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம், கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கொக்குவில் மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவர்களிடையே முதலிடம் பெற்றுள்ளார்.

அம்மா, அப்பா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமே தனது வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ள கஜலக்சன், எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.