October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடிவு!

பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மார்ச் 14 ஆம் திகதி நள்ளிவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கட்டண அதிகரிப்புக்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து குறிப்பிட்ட வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன்படி கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் நாளைய தினத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.