October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட 15  விடயங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜகத் புஷ்பகுமார, சாந்த பண்டார, சாரதீ துஷ்மந்த, ஷான் விஜயலால் டி சில்வா, சாமர சம்பத் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.