October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீரவன்சவின் கட்சியினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகல்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளனர்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

அமைச்சர் பதவியில் இருந்து விமல் வீரவன்ச பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து ஜயந்த சமரவீர விலகியுள்ளார்.

தங்களின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணியில் 6 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.