June 11, 2025 4:14:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்குத்தந்தை காலமானார்!

திருகோணமலை -ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலை, அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்குத்தந்தையான கனேஷபிள்ளை நிதிதாசன் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை, மரதன்கடவல பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மலை பகுதியிலிருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்றும், வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காரொன்றும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காரில் பயணித்த 49 வயதுடைய கனேஷபிள்ளை நிதிதாசன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹொரவப்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.