June 11, 2025 10:09:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

File Photo

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தித்துள்ளார்.

வத்திக்கானில் இன்று பரிசுத்த பாப்பரசரை, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் குறைபாடுகள் தொடர்பில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பாப்பரசருக்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்காமை தொடர்பில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த காலங்களில் ஊடக சந்திப்புகளில் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாப்பரசருக்கு கூற நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் ஊடக சந்திப்புகளில் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் பேராயர் உள்ளிட்ட குழுவினர், தற்போது வத்திக்கானுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு பாப்பரசரை சந்தித்துள்ளனர்.