September 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எனது ஆட்சியில் இந்தளவுக்கு பிரச்சனை இருந்ததில்லை”: மைத்திரிபால

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட அனைத்து தரப்பினரும் கட்சி, பேதங்கள் இன்றி ஒரே மேடைக்கு வர வேண்டிய காலம் உருவாகியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் ஆட்சியேற்ற பின்னர் பிரச்சனைகள் இல்லாத அழகிய நாட்டை உருவாக்கியிருந்தேன் என்று அதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சில பிரச்சனைகள் இருந்தாலும், நாட்டு மக்களின் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்கள் இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் மீது குறைகளை கூறிக்கொண்டிருக்காது, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க பங்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.