May 2, 2025 23:39:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தேர்தலுக்கு தயார்”: அரசாங்கம் அறிவிப்பு!

File Photo

தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று ஆளுங்கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்‌ஷக்கள் ஒருபோதும் தேர்தலுக்கு பயந்தவர்கள் இல்லையென்றும், எப்போது வேண்டுமானாலும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் கூறியுள்ளார்.

இதன்படி எந்த நேரத்திலும் இதற்கான அறிவித்தல் வெளியாகலாம் என்றும், இதனால் அதற்கு தயாராகுமாறு எதிர்க்கட்சியினருக்கு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.