நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியொன்று மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த பல வாரங்களாக செயலிழந்திருந்த இந்த மின்நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இன்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்குள்ள மின்பிறப்பாக்கியொன்று மீண்டும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.