October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயிலில் மோதி ஆட்டோ விபத்து: ஒரே குடும்பத்தில் நால்வர் பலி!

காலி, ரத்கம பகுதியில் ரயில் கடவையொன்றில் ரயிலுடன் மோதி ஆட்டோ ஒன்று விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஆட்டோ சாரதி, அவரின் மனைவி, மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான சீசீடிவி வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் ரயில் வருவதை அவதானிக்காது ரயில் கடவையை கடக்கும் போது ரயிலில் மோதும் ஆட்டோ துண்டு துண்டுகளாக தூக்கி வீசப்படுகின்றது.

விபத்து தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.