June 15, 2025 10:24:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் இயங்கும் நுரைச்சேலை மின் நிலையம்!

Electricity Power Common Image

கடந்த சில வாரங்களாக செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மீன் உற்பத்தி நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டள்ளது.

அந்த மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்தன.

இந்நிலையில் செயலிழந்திருந்த மின்பிறப்பாக்கிகள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனூடாக 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியுமாக உள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை எரிபொருள் நெருக்கடியால் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டை அமுல்படுத்துவதா? இல்லையா? என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளது.

நுரைச்சோலை மின்நிலையத்தின் ஊடாக மின் உற்பத்திகள் இடம்பெறுவதால் மின்வெட்டு இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.