
இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சர்வதேச கடற்பரப்புக்கு அருகில் பயணித்த இரண்டு படகுகளில் இருந்து 330 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – குடாவெல்ல பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவ படகுகளில் இருந்தே இவ்வாறு போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், இதன்போது படகில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த போதைப் பொருளையும் படகுகளையும் இன்றைய தினத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தப் பொதைப் பொருள் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டு சர்வதேச கடற்பரப்பில் கைமாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் இலங்கை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், இந்தக் கடத்தலுடன் துபாயில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ‘ஹரக்கடா’ என்பவர் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.