June 1, 2025 10:14:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டொலர் இல்லாவிட்டால் எரிபொருள் கிடையாது: மின்சார சபைக்கு எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை!

மின்சார சபையினால் எரிபொருளை விநியோகிப்பதென்றால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய டொலர்களை வழங்க வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெருமளவான எரிபொருள் மின்சார சபைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 920 மில்லியன் ரூபா இன்னும் செலுத்தப்படாது இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் மின்சார சபைக்கான எரிபொருளை விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் இருப்புக்கள் பெட்ரோலியன் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்றும், அதற்கு வழங்கினால் போக்குவரத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மின்சார நெருக்கடி நிலைமையை தவிர்த்துக்கொள்வதற்காக இந்திய நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.