July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஆட்சியாளர்கள் எங்களுடனான உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை”: மைத்திரிபால

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர்கள் கறிவேப்பிலையை போன்று ஒதுக்கி வைத்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையில் உள்ள நிபந்தனைகள் எதுவும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் நல்லதொரு குழு இருக்க வேண்டும் என்றும், தனியாக கொண்டு செல்ல முடியுமென்று எவரும் நினைக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் தனது பதவிக் காலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நீடிப்பதற்கு முயற்சிக்கக் கூடாது என்றும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.