June 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படுகிறது!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி நிலைமையை காரணமாக இதனை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்று முதல் இம்மாதம் இறுதி வரையில் அந்த நிலையம் மூடப்படவுள்ளது.

இதனை மூடுவதால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்றும், தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நவம்பர் 15 ஆம் திகதி முதல் மூடப்பட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் டிசம்பர் 7 ஆம் திகதி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.