May 29, 2025 19:02:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரதமர் மகிந்த ஓய்வு பெற மக்கள் இடமளிக்க மாட்டார்கள்”: திலும் அமுனுகம

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதனை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே மகிந்த ராஜபக்‌ஷ அரசியலில் இருந்து ஓய்வுபெற முயன்றார். ஆனால் அதற்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை. அதனாலேயே அவர் மீண்டும் பிரதமராகியுள்ளார் என்று திலும் அமுனுகம இதன்போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விரும்பியோ, விரும்பாமலோ பதவியில் இருந்து விலகுவதற்கு பிரதமர் முயன்றாலும் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.