July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உணவகங்களில் பால் தேநீர் விற்பனை நிறுத்தம்!

பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் விற்பனையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பால் தேநீர் விற்பனை இடைநிறுத்தப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பால்மா விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்நிலையில் ஹோட்டல்களில் தேநீரின் விலைகளை அதிகரித்து மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை என்று அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனால் தேநீர் விற்பனையில் இருந்து விலகியிருப்பதே பொருத்தமானது என்று கருதுவதால் அதனை செய்ய தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் 30 ரூபா முதல் 45 ரூபா வரையிலான விலைக்கு விற்பனையான பால் தேநீரின் விலை தற்போது 60 ரூபா முதல் 80 ரூபா வரையிலான விலைகளுக்கு விற்பனையாவதாக அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.