July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருக்கும் அரிசி கொள்கலன்கள்

File Photo

டொலர் நெருக்கடி நிலைமை காரணமாக கொழும்புத் துறைமுகத்தில் 500 அரிசி கொள்கலன்கள் தேங்கியிருப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியே அவற்றில் காணப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய மேலும் 1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருப்பதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவற்றை விடுவிப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதற்காக இறக்குமதியாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.