June 12, 2025 8:07:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார ஊழியர்கள் யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

மருந்து விலைகளை குறைத்தல், பாடசாலை மாணவர்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் அங்கமாகவே யாழ். நகரில் இன்று இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

இதில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் இருந்து பேருந்து நிலையம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இதனால் யாழ். நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.