June 1, 2025 23:52:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த சூழ்ச்சியா?”: முருத்தெட்டுவே தேரர் கேள்வி!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை பதவி விலகவுள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், கொழும்பு அபயாராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவரை பதவி விலக்குவதற்கு சூழ்ச்சிகள் ஏதும் நடக்கின்றதா என்ற கேள்விகள் எழுவதாகவும், ஆனால் அவர் இந்த அரசாங்கம் இருக்கும் வரையில் பதவியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைப்பதாகவும் முருத்தெட்டுவே தேரர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி விலகிச் செல்வதாக இருந்தால் அவர் எங்களிடம் கூறாது போகமாட்டார் என்றும், இதனால் இது தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மையாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் பதவி விலகுவதற்கு மகிந்த ராஜபக்‌ஷ தீர்மானம் எடுத்திருந்தால் அந்தத் தீர்மானத்தை கைவிட வேண்டும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.