
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 8 ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்றும் இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் அவர் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வரும் நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.