February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்வே போராட்டம் கைவிடப்பட்டது!

இலங்கையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று மாலை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒருவார காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ரயில் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், 27 ஆம் திகதி முதல் தமது போராட்டதை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.