July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டிசம்பர் 29 முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்!

பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் புதன்கிழமை முதல் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய எவ்வாறு பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பது என்று ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

இதன்படி அந்த அறிக்கை புதன்கிழமைக்குள் சமர்பிக்கப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.