October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தில் காகித பாவனையை குறைக்க நடவடிக்கை!

இலங்கை பாராளுமன்றத்தில் காகித பாவனையைக் குறைப்பதற்கான  வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் கூடும் நாட்களில் மேசைகளில் அதிகளவிலான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அங்கு காகித  பாவனையைக் குறைப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கு யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

2022 ஜனவரி மாதத்திலிருந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.