July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமாக சேர்க்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை!

இலங்கையில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் 1917 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக புலனாய்வுப் பிரிவிற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.