July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை தாண்டிய மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது!

File Photo

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 14 பேர் யாழ்ப்பாணம், எழுவைதீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை, இரண்டு படகுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் 43 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.