May 14, 2025 17:45:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன!

இலங்கையில் டிசம்பர் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 23 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒடோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சுபர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.