July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்: ஐவர் காயம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் கற்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய், பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் காயமடைந்த மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.