July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம்

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சென்ற பஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை (17) இரவு கதிர்காமத்தை நோக்கி பயணமான போது இன்று அதிகாலை பதியத்தலாவை-கல்லோடை பாலத்துக்கு அருகில் பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மகா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.