June 1, 2025 17:04:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை தாண்டிய 43 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடலில் கைது!

File Photo

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  கடற்படையினர் 6 படகுகளுடன் மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் காங்கேசன்துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.