July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கத் திட்டம்!

அதிபர், ஆசிரியர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு மற்றும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த மாதங்களில் அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை இது தொடர்பில் 6 மாத காலத்திற்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.