February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் 9 அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உட்பட 9 அதிகாரிகளுக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது.

பன்னில பகுதியில் உள்ள ஆற்றில் நீராடும் போது பிரதேச மக்களுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, இவர்கள் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மரண வீடொன்றுக்குச் சென்று திரும்பும் போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.