July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் மக்கள் போராட்டத்தால் திரும்பிச்சென்ற நில அளவை அதிகாரிகள்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றனர்.