July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை தரக் கட்டுப்பாட்டு சபை அனுமதிக்கும் சிலிண்டரை மாத்திரம் சந்தைப்படுத்தவும்’: நீதிமன்றம்

இலங்கை தரக் கட்டுப்பாட்டு சபை அனுமதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாப்ஃஸ் மற்றும் லிட்ரோ ஆகிய எரிவாயு நிறுவனங்களுக்கே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிலிண்டர்களை மீளப்பெற உத்தரவிடுமாறு சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தரக் கட்டுப்பாட்டு சபையின் விதிகளுக்கு அமைவான எரிவாயுவை மாத்திரம் தாம் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக நிறுவனங்கள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளன.