July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோப்பாய் கல்வியியல் கல்லூரியை தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற முடிவு

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியை தற்காலிக கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றுவதற்காக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை தங்க வைப்பதற்கான இடவசதிகளையும் அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், மருதங்கேணியில் ஒரு வைத்தியசாலை அமைக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு வைத்தியசாலையாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும் மாற்றப்படவுள்ளது.

தற்போது கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 217 பேரையும் நாளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கல்வியியல் கல்லூரி கட்டடம் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அவ்வாறு கையளிக்கப்படும் கட்டடத்தின் மாணவர்கள் விடுதி வைத்தியர்கள் விடுதியாகவும், கல்விக் கூடம் வைத்தியசாலையாகவும் மாற்றப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.