June 11, 2025 8:10:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று வெளியுறவு அமைச்சில் நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரஸ்பர ஒத்துழைப்பு சார்ந்த விடயங்கள் மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் விளைவுகள் தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.