July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நான்கு ‘ஒமிக்ரோன்’ தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபான ‘ஒமிக்ரோன்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோய் எதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும், பேராசியருமான மருத்துவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மருத்துவர் சந்திம ஜீவேந்திர கேட்டுக்கொண்டுள்ளார்.