July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயிர்கள் அழிவடைந்ததால் வாழ்வாதாரம் இழந்த முல்லைத்தீவு விவசாயிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னி விளாங்குளம் மற்றும் அம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் தமது வாழ்வாதார பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு வகையான பயிர் செய்கைகள் யாவும் தொடர்சியாக பெய்த மழை காரணமாக முழுமையாக அழிவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த பப்பாசி, மிளகாய்ச் செடி மற்றும் கொடித்தோடை போன்ற பயிர்கள் முழுமையாக அழிவடைந்து காணப்படுகின்றன

இதனால் விவசாயிகளுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஏற்படுகின்ற அழிவுகளுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணங்களும் கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.