June 11, 2025 3:21:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இதுதான் பனை மரம்”: சீனத் தூதுவருக்கு விளக்கிய டக்ளஸ்

வடக்கிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் யாழ். மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று (16) காலை அரியாலை கடலட்டை பண்ணைக்கு சென்ற அவர், அங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.

இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது.

அங்கு நின்ற பனை மரத்தினை தூதுவருக்கு காண்பித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் ‘பல்மேறா’ என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.

இதில் கள்ளு, மதுசாரம் உற்பத்தி செய்யலாம் என்றும் இது உடம்புக்கு கேடு விளைவிக்காது எனவும் விளங்கப்படுத்தியபோது தூதுவர் அதற்கு ‘ஹா ஹா’ என சிரித்தார்.